This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, 13 February 2019

Barkkavi's என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி

 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


“Dei, Yenda edho kappal kavundha mathiri utkarndhuruka. Ennachu?”


“Mchuu, Onum ila.”


“Nambiten.”


“Vidu d. Naane break-up pannalanu iruken.”


“Ennaadhu break-up uh!!!”


“Nee yendi ivlo shock aagura?”


“Pinna un love ku pillayar suzhila aarambichu ovvoru dhadava sandai podum podhu patch-up


panni, unga love uh valarthu vitaa (ennamo soru potu valartha mathiri! Hehe) nee ennamo easy uh


break-up nu sollura.”


“Vidu d yerkanave ava paduthuradhu pathadhu nu nee vera.”


“Hey lusu ennachu nu ipo solla poriya ilaya.”


“Vera ennaganum epavum pola sandai dhan.”


“Adhan epavum poduradhu dhana ipo enna pudhusa break-up?”


“Romba over-uh panra d. Ninna thappu nadandha thappu na enna seiyuradhu. Nethu edho


party am , adhuku nan varala nu ipo sandai. Neeye sollu ava gang poora girls. Anga poi nan enna


seyya? Sonna purinjukave matingura.”


“Lusu ava una kupita, ava friends um avanga lover uh kupitu irupangala, idha yenda nee


yosikala?”


“Adhellam yosichen…”


“Apo inum vishayam mulusa veliya varala pola iruke…”


“Ila adhu vandhu…”


“Ilukama matter ku vaa da.”


“Nan eppavum un kuda suthitu irukennam. Nee dhan ennaku romba mukkiyamam.”


‘Oh! Possessiveness’


“Ava sandai poduradhula ennada Vishy thappu iruku?”





 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


Adhirndhu poi ennai paarthan Vishal – en aaruyir nanban, thozhan, mithran (Haha Sentamizh la


try panen)


“Ennadi ipdi solra ava namma natpaye thappa pesura nee enna na avaluku support panra?” –


aluthukkondan.


“Ipo yen ivlo tension aagura. Cool. Ponnunga psychology theriyama neeyellam edhuku love


panra?”


Ennai paavamaga paarthan en nanban. “Udane appavi look uh lookuradhu.” (Pakuradhu ku


thanglish la.. Hahaha)


“Ipo edhuku da inji thinna korangu mathiri moonji uh vachuruka. Indha iduthula ponnunga


psychology enna nu ne ketrukanum..”


“Adhan ennakum serthu neeye pesuriye – pesu..”


“Unnalam epdi dhan ava accept panalo…”


Avan ennai muraika aarambithan. “En personality uh parthu dhan d”


“Thu. Unake idhu over uh therila. Personality am personality…”


“Sari sari vidu tension aagama un lecture uh aarambi d.”


“Poda lusu. Ovvoru ponnum avanga manasuku nerukamanavanga thannoda dhan neraya


neram spend pannanum nu nennaipanga. Idhu dhan possessiveness. Silar idhuku mela poi thannoda


mattum dhan irukanum nu nennaipanga. Rendukum perusa viddhiyasam ila. Epo thaan


virumbunavanga thanna vida innorutharuku adhuvum ponna irundhu avangaluku importance


tharangalo apo possessiveness over-possessiveness uh maruthu…”


“Ivlo perusa paadam nadathuniye idhula irundhu enna solla vara?”


“Iru da cashew nut. Nan dhan sollitu iruken la…”


“Ellam en neram! Solluma thaaye.”


“Ennada pichaikaran range ku erangita.” Avan muraithadhum, ”Unaku moolai irundha appove


purinjirukum. Adhan ilaye!”


“Inniku enna over uh otitu iruka d. Idhu sariye ila.”


‘Hmm ipo otunadhana nee edhuvum thirupi ota maata’ ena manathirkul ninaithu, “Idhellam


unaku pudhusa Vishy, daily nadakuradhu dhana.”


Avan porumai avanai vitu romba thooram poikondirupadhai unarndhen nan. Meendum avanai


vambilukaamal thodarndhen.





 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


“Nethu nee yen ava kooda pogala? Unmai uh sollu.”


“Adhan unake theriyum la d” avan munanginan.


“Romba mukkiyam” erichalodu koorinen nan.


“Ennadi?”


“Nonnadi. Lusu un lover kuda oor suthuradha vida en kooda match pakuradhu dhan unaku


mukkiyama” – potu vanginen nan. (Paya pulla yara vitu kudukuran nu papom)


Avano kovamaga, “Enaku ava evalavu mukkiyamo neeyum avlo mukkiyam”, Mugathai


thirupinan avan. (Chaa paasamana paya pullaya irukaane!!!)


Enna dhan veliye avanai thitinaalum manathirkul santhosamaga irundhadhu. Pinne, 11 varuda


natpaagitre. Aam palliyilirundhu kalluri varaikumana natpu ipodhum thodargiradhu…


“Muganaga natpadhu natpandru nenjathu


Aganaga natpadhu natpu”


endru valluvar kooriyadhu pola natpirke example engal natpu. (Konjam over uh dhan poromo. Povom


yaru ena solla pora.. Hahaha)


Rettai jadai pota vayadhilirundhu (avan half drawer potirupan nu sonna ena adipan.. Hehe)


matravar saapatai thirudi thinpadhil irundhu, Oruvar project ai matravar color xerox poduvadhu varai,


kalluri kalangalil (avan French beard vachurundhan- Haha) veru veru department aaga irundhalum copy


adipadhu varai (Adhu onnum ila pakathula irukura payan uh merati avan paper uh vangi kudukuradhu)


engal natpin udharanangalai aduki konde pogalam. Atthagaya aazhama natpu engal natpu. Surunga


sonnal ore thatil sapitu, ore pencilil eluthi, ore aasiriyaridam adi vangi (Shappa mudila ipove kanna


katudhu) midhi vangi valar(n)thadhu engal natpu!!!


“Sari sari moonji uh thooki vachukaadha enaku pasikudhu. Restaurant ku vandhutu enaku


edhuvume vangi tharama iruka?” Avanin mananilaiyai maatra keten.


Thalaiyil adithukkondan avan. ‘Ipo edhuku indha pakki thalai uh adichukuran. Apdi enna thappa


ketom. Sapadu ketadhu oru kuthama?’


“Adi lusy naama ipo edhuku inga vandhurukom, nee enna ketutu iruka?” oru mathiri paarthan


avan.


“Hehe sorry da Vishy payya. Unaku advice panadhula nan marandhuten.”


Aam nangal inge vandhirupadhu enaku mappillai parka. (hmm enakum aasai dhan oru payan


viituku poi bajji sojji ellam sapitu, payanuku paada varuma aada varuma nu ketka… Adhellam enga


nadakudhu. Adhan indha pudhu set-up). Mappilai avargal (Mariyadhai – Hehe) en appavin nanbar


magan. Iravil kuda kan vizhithu paarkum (koorka vela ilapa) IT velai. Sambalam arai latchathai thodum.





 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


Enaku ipodhu kalyanathil virupamillai endralum ammavin varpuruthalinal dhan vandhen. (Indha Vishy


payyana nan engayum odama pathuka solli anupirukanga)


“Yenda andha aalluku konjam kuda punctuality na enna nu theriyadha?” – poriya aarambithen


nan.


Avan kulungi kulungi sirika aarambithan. “Edhuku da lusu mathiri sirikura?”


“Pinna sirikama. Neeyellam punctuality pathi pesurila. Adhan”


Nan muraithen avanai. “Hey lusy nee sikiram vandhutu avara thititu iruka”


“Enna da solra?” – kulapathudan keten.


“Haha lusy epdiyum nee sikiram kelamba maatanu unga amma arai mani nerathukku


munnadiyeunnai pack-up pannitanga. Hahahaha”


“Sirikadha da eruma” – ‘Indha amma ku en kuda vilayaduradhe polapa pochu. Irukattum


vachukuren oru naal’


“Aama d enaku oru doubt.”


“Enna doubt da Vishy?”


“Ila engalukellam lovalogy professor mathiri love tips alli alli kudukuriye, neeyen love


panala?”


“Adhukellam time ila da Vishy. Nan romba busy!”


“Aama nee ulagam sutrum vaalibi(vaalibanin penpaal - Haha) sollu d olunga”


“Endha commitments kullayum poga virumbala da nan. Indha vayasula dhan da free uh iruka


mudiyum. Ipove vaalkaiya anubavichudanum. Apuram kalyanam aagita adhukullaye moolgiduvom.”


“Adipaavi apo edhuku enga kitta love dhan ulagathulaye nalla vishayam nu love ku


ambassador mathiri pesuna?”


“Pinna nee love panala na ena mathiriye single dhan gethu nu sollitu thirunjurupaye.”


Avan kadupaagi ennai adika aarambithan.


‘Ennada adhukulla niruthitan’ – Kannai thirandhen. Ethiril uyaramana oruvan – mugathil


marundhirku kuda siripillai. ‘Yaru da indha valarndhu kettavan. Sariyana kanjoosa irupan pola. Sirika


kuda matinguran.’


Nan avanai muraika avan ennai muraika, Vishy paavamaga engalai paarthan. Soozhnilaiyai


ilaguvaka Vishy avanidam kai kulukinan – “Hi, I’m Vishal.”





 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


Millimeter punnagaiyai udhatukul kondu vandhu, “Hi I’m Aakash” endran.


‘Oh ivan dhan andha Mr.Mappilai uh. Cha amma photo kaati avan pera sonanga. Nan dhan


sariya gavinakala. Ipo ena sir ku vanakkam vaikanuma’ (ullukul attentionil salute vaikumaru yosithen)


menmuruval en udhatinil.


Adhai kandu puruvam uyarthinan. ‘Ayo oru vela kandupidichurupano! Pidicha pidichikattum.


Enaku enna bayam!’ Vishal ai paarthen avan edho pattikaataan mittaikkadai ai paartha mathiri avanai


paarthukkondirundhan.


‘Sight adika vendiya naane chuma iruken ivanedhuku ipdi sight adichutu irukan. Indha paarvai ai


un aalai paarthirundha inneram engayo poirupa. Ellam en neram idhellam paathutu iruken’


maanasikamai thalaiyil adithukkonden. Ipodiku idhu mudiyadhu endru Vishy in kaiyil idithen.


Avan adikuralil. “Enna d lusy?” endran.


“Edhuku da ipo avana ipdi sight adikura?”


“Ennadhu sight adikurena. Unaku avan match avana nu paarthutu irundhen d pakki.”


“Yaru nee?”, nambaamal paarthen.


“Hehe avan potruka ellame nalla iruku d. Adhan ena brand nu paarthutu irundhen.”


Maansikamaaga avanai kaari thupivitu thirumbinaal andha Mr. Valarndhu kettavar(mariyadhai)


engal iruvaraiyum muraithukkondirundhar. ‘Ivanedhuku ipdi paasama paakuran. Vitta parvaileye


erichuduvan pola.’


“Un kuda thaniya pesanum” endran.


Vishy udane elundhan. Avanai orakannil paarthu(muraithu) utkarasonen.


“Paravaillai ipadiye pesalam” endren nan.


Ipodhu avan mugathil kobathin saayal koodirundhadhu. ‘Pinna enaku munnadiye en nanbanai


veliya poga sonna’ avanai muraithuvitu Vishyidam thirumbinen. Avano paavamaga ennai paarthan.


Avanidam ‘Nanbenda’ look uh vitu Mr. Valarndhu kettavanidam thirumbinen.


Avan perumoochu vitu kobathai kuraipathai kandu ullukul sirithukkonden.


“Inga edhuku vandhuruka nu theriyuma?” Avan kastapattu kobathai adakuvadhu


therindhadhu.


“Yen theriyama adhellam nalla theriyudhu.” Vendum endre nakkal kuralil koorinen.


“Apo thaniya pesanum nu nan sonadhula enna thappu?”





 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


Enakum adhu purindhadhu. Sadharanamaaga idhai solli irundhal nan othukkondirupeno ennavo.


Aanal avan Vishy ai paartha paarvaiyil ena irundhadhu endru ennal yosika mudiyavillai. Aanal


nichayamaaga nalladhaga illai. Avan paarvaiyile engal natpai yetrukkollamaatan endru purindhu vitadhu.


Melum en nanbanai epadi avan apadi paarkalam endra kobam veru ennai apadi pesa vaithadhu.


Vishy veru en kaiyai surandi amaithiyaaga irukumaru koorinan. Aanal andha valarndhu


kettavano (inime edhuku mariyadhai) adhayum thavaraga paarthan. Inime kandipa indha valarndhu


kettavanuku ‘no’ dhan.


“En friend ku theriyama en vaazhkaila edhuvum ila. So nenga edhu solradha irundhalum


ingaye solalam.”


“Damn it. Edho chinna ponna irukanu porumaya pesuna romba dhan pesura.”


“Hello yaru chinna ponnu. Enaku 23 vayasachu.”


Vishal thalaiyil adithukolvadhu enaku therindhadhu. ‘Ipo indha lusy ku idhu thevaya.’ Avanai


paarthu sirithen.(indha ranakalathulayum unaku kilukilupu kekudhu)


“Inga paaru enaku varapora wife enaku dhan importance kudukanum nu nan ninaikiren.”


Idhai enayum Vishalayum paarthukkondu avan koorinan.


“Oh ok ungaluku nalla wife kidaika vaazhthukkal.”


“Thimiru odambu full uh thimiru. Una yellam evan kalyanam panra nu paakren.” endru


koorikkonde elundhu sendran.


“Kavalapadadhinga sir. Ungaluku invitation anupuren” avanuku ketka vendum endre kathi


sonen.


“Lusa d nee. Avaru dhan thaniya pesanum nu sonnarula thaniya pesuradhula unaku ena


vandhuchu.”


“Avan unayum ennayum ipove thappa pakuran. Namala ipove nambadhavan nalaiku vera


edhukagavavadhu ena sandhegapadamattanu ena nichayam?”


“Ivlo neram enaku class eduthela d possessiveness nu. Avarum adhe dhana sonnaru. Avaru


wife avara mattum mukkiyama nenaikanum nu.”


“Oruthar uh love panni avanga mela varadhu dhan possessiveness. First ae en wife ipdi dhan


irukanum nu nenaikiradhu possessiveness kedayadhu. Inga love ngra pechuke idamila. En wife enaku


pidicha mathiri dhan irukanum, avaluku nu endha sondha aasaiyum iruka kudadhu nu nenaikiradhu


male chauvinism.”


“Ipo ena dhan solla vara?”





 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


“Enaku avan set aaga maatan nu solla varen. Idha celebrate panradhuku enaku oru milkshake


vangitha da Vishy”


‘Adipaavi inikavadhu en purse uh kaapathikalam nu vandha, inikum aapu vaikuraale’


“Dei nee mind voice nu nenachu sathama pesitu iruka da”


‘Idhuku mela irundha ena pirandiduva.’ “Iru d lusy nan vangitu varen”endru sendran.


Apodhu oru table thalli irundha aval elundhu vandhal. Aval Sreenidhi, Vishalin kaadhali.


“Sorry Kavi. Unayum Vishalayum nan neraya thadava thappa nenachuruken. Nethu kuda avan


un kuda irundhan nu avan kita sanda poten. Munnadi irundhe avan unkita close uh irukan nu enaku


un mela kobam irundhuchu. Unkita idhuvaraikum nan sariya kuda pesala. Ipo kuda avan unkuda


restaurant la ena panran paaka dhan pakathu table la utkarndhirundhen. Ipo adha nenacha enake


kevalama iruku. Aana nee enakaga evlo pesuna nu therinjukiten. Ennoda nilamaya avanuku puriya


vachadhuku thanks.”


“Hey cool. Edhuku ivlo perusa pesura. Iru ipo dhan un boyfriend unakaga juice vanga


poirukkan.”


“Nan inga irukuradhu avanuku theriyuma?”


“Ila avan sariyana tubelight. Ipo dhan avanuku signal kaamichen. But nee inga irukanu enaku


first ae theriyum. Therinja naala dhan una pathi avan kita pesa aarambichen. Inga paaru Sree sanda


podalam kandipa podanum but edhunaala sanda vandhuchu nu rendu perum pesikitaale adhu


mudinchidum. Nee engala thappa nenachadha nan thappu solala. Ellarume avanga vaazhkaila indha


situation face pannuvanga. Aana indha sandhegam vandhapove enga rendu pethula yarukitayavadhu


pesirundha ipo adhu perusa aagirukadhu. Unaku onnu theriyuma sir una love panren nu enkita dhan


first sonaru. Avanum nanum nearly 11 years uh onna suthitu irukom. Adhunaala avanuku endha oru


decision edukuradhukum ena ketutu irukan. So avan unkuda time spend panradhuku konjam wait


pannu. “


“Enaku puriyudhu Kavi. Enadhan unga mela kobam irundhalum, enaku unga friendship uh


paathu poramaya iruku. Friendship kaaga kalyanatha kuda yosikira nee. Unmaileye unga friendship


great dhan.”


Avalai paarthu punnaigaithen nan.


“Cha cha cha ena kootam. Oru milkshake um juice um vanguradhukulla ena paadu pada


vendiyadhairuku. Indha d lusy unaku milkshake and darling unaku juice” ilithan avan.


“Inga yaaro break-up pathi pesunaangale Vishy yaru nu unaku theriyuma?”


“Yaru d adhu. Darls unaku theriyuma”


“Adinga ivlo neram ennana ena pathi pesuna. Ipo Darls uh nan” avanai potu mothinal Sree.





 


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


“Adipaavi un aaruyir nanban uh ipdi adikura adha pathu sirikura pakki.”


“Sree sir ku adi pathaliyam en sarba inum naalu podu.”


“Ayo idhunga rendum thani thaniya irundhale nan sethen. Ipo rendum sernthuchungana ena


pirichu menjuduvanga. Me escape”


Vishy oda avanai thurathikkondu Sree um odinal.


Mmm kaadhalai vida natpu oru padi mel. Engo yaro sonnadhu en kaathil ketadhu. Aam indha


ulagathil ovvoru uravum edho ondrai ethirparthe irukiradhu. Aanal edhaiyume ethirpaarkadha uravu


natpu mattume. Evvidha prechanayayum siridhakuvadhu natpu. Aan-aan natpayum pen-pen natpayum


kondadum ivvulagam adhe natpu oru aanukum pennukum idaiyil varumbodhu mattum adhai sariyana


kannottadhodu paarka marukiradhu. Evalavo vishayathil nam munneri irukumbodhu immathiri sila


vishayangalai nam pakutharindhu kaana marukirom.


“Hey Kavi inga ena seyura. Vaa polam.” – Sree.


“Idho varen.”


Thozhanin tholgalum annai madi


Avan thoorathil poothita thoppul kodi


Kaadhalai thaandiyum ullapadi


Endrum natpu dhan uyarndhadhu paththu padi


Un natpai nangal petrom


Athanale yaavum petrom


Mele mele sendrom


Vaan megam pole ninrom


Puthu paathai neeye potuthandhai


Yen paadhi vazhiyil vittu sendrai


Oru thayai thedum pillaiyanom


Nee illai endral enge povom




Wednesday, 12 December 2018

Chella's புதையலைத்தேடி


"ஆதி. ஓடு. ஓடு. நிக்காம ஓடு" - என கத்திக்கொண்டே பின்னால் ஓடிவந்தான் நகுல். அவன் பின்னே பரத்தும் இன்பாவும் பின்னங்கால் பிடரியில் படும் அளவு ஓடி வந்துகொண்டிருந்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம் நால்வரும். மாட்டிக்கொண்டால் உயிர் போவது நிச்சயம். தேவையா இந்தத் தொல்லை எனது தோன்றியது. முதலிலேயே இன்பா வேண்டாம் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். நாங்கள் இந்தக் காட்டிற்குள் வந்ததும் இல்லாமல் அவனையும் வலிய இழுத்து வந்தோம். இப்போது எல்லோருடைய உயிரும் இந்தக் காட்டுவாசிகளின் கையால் போய்விடும் போல் இருக்கிறது. உயிர் பிழைத்தால் நிச்சயம் இந்தப்பக்கம் வரவே கூடாது என்று தோன்றியது.

"ஆஆ. ஹூஹூ! ஹூஹூ! ஹோ. ஹோ. ஹோ" என அலறிக்கொண்டே பின்தொடர்ந்தார்கள் அந்தக் காட்டுவாசிகள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் துரத்திக் கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தான் அவர்களின் தலைவன். அவன் துரத்தி வரும் வேகமும் ஆக்ரோஷமும் பாகுபலியின் காளகேயனைப் போல் இருந்தது. பின்னால் வருபவர்களும் காளகேயனின் கூட்டத்தினர் போலத்தான் இருந்தார்கள். கண்டிப்பாக இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் நிச்சயம் மரணம் அவ்வளவு சுலபமாக இருக்காது என்று தோன்றியது. மரணபயம் உடலை அசுரவேகத்தில் இயக்கிக்கொண்டிருந்தது. பயத்தில் கால்கள் தானாக ஓடிக்கொண்டே இருந்தன. மேடு பள்ளம் என்று பாராமல் வழி தெரியும் திசையில் விழுந்து எழுந்து புரண்டு ஓடிக்கொண்டிருந்தோம். அப்போது தான் நாங்கள் எதைத் தேடி வந்தோமோ அது கண்ணில் பட்டது.

"நகுல் அங்க இருக்கு பாரு" என்று கத்திக்கொண்டே அவனுக்கு அதைக் காட்டினேன்.

நான் காட்டிய திசையில் பார்த்துக்கொண்டே என்னைப்பார்த்துக் கத்தினான் "வேணாம் ஆதி. இது ரொம்ப ரிஸ்க். விட்டுரு. ஓடிடலாம்" என்று.

"இல்லடா. எடுத்துடலாம். நீங்க ஒடுங்க. நான் எடுத்துட்டு வர்றேன்" - என்றேன் உறுதியுடன்

"லூசுப்பயலே. மாட்டுனா ஆதி 65, நகுல் சுக்கா, இன்பா பிரியாணின்னு போட்டு சாப்டுட்டு போயிட்டே இருப்பானுங்க. இந்த ரணகளத்துல உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா?" - கதறினான் பரத்.

"நான் எடுத்துட்டு வர்றேன். நீங்க ஒடுங்கடா" என காற்றில் கத்திவிட்டு பாதை மாறி ஓடிக்கொண்டிருந்தேன்.

"போடாங்" என பரத் திட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தபோது நான் பாதி தொலைவைக் கடந்திருந்தேன்.

இருவேறு திசைகளில் பிரிந்து ஓடிக்கொண்டிருந்தோம் இப்போது. எங்களைப்போலவே அந்த ஆதிவாசிகளின் கூட்டமும் இரு திசைகளில் பிரிந்து எங்களைத் துரத்தி ஓடி வந்துகொண்டிருந்தார்கள். நால்வர் மட்டும் என்னைத் துரத்த மற்றவர்கள் என் நண்பர்களைத் துரத்திச் சென்றுகொண்டிருந்தனர்.

பயமா, ஆசையா எது என்று தெரியவில்லை. தூரத்தில் மின்னிக்கொண்டிருந்த அந்தப்பொருளை நோக்கி வேகமாய் உடல் ஓடிக்கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக என் பின்னால் வந்துகொண்டிருந்த ஆதிவாசிகள் பின்தங்கியிருந்தனர். ஆனால் மற்றவர்களைத் துரத்திக்கொண்டிருந்த ஆதிவாசிகள் முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

நான் என் இலக்கை அடைந்திருந்தபோது என்னைத் தொடர்ந்துவந்த ஆதிவாசிகளைக் காணவில்லை. வழிதவறியோ அல்லது தொடர்ந்து வர முடியாமலோ பின்தங்கியிருக்கலாம்.

நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வேகவேகமாக என் முன்னால் இருந்த அந்தப் பாறையில் ஏறினேன். அதன் உச்சியில் உள்ள இடுக்கில் சிக்கிக்கொண்டு இருந்தது அந்தத் தங்கக்கட்டி. அதற்காகத்தான், இந்தப் புதையலுக்காகத்தான் இவ்வளவு ரிஸ்க்கும். குறைந்தது இருபது கிலோவாவது இருக்கும். பாறைமுகட்டின் இடுக்கில் இருந்துகொண்டு அரசிளங்குமரி போல் கண்சிமிட்டியது. அதன் மினுமினுப்பு என் ஆர்வத்தை மேலும் கூட்டியது. அவசர அவசரமாக பாறையின் உச்சியில் ஏறி அதை எடுக்கலானேன். அப்போதுதான்

"ஆதி" என அலறினான் இன்பா.

"இன்பா" என்று கத்திகொண்டே இன்பாவின் குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன்.

"ஆதி" - இப்போது பரத்தின் குரல் கேட்க ஆரம்பித்தது. நான் ஓசை வந்த திசையை நோக்கி ஓடியபடியே இருந்தேன். தொலைதூரத்தில் உருவங்கள் தெரிய ஆரம்பித்தன.

பரத் என் கண்ணுக்குத் தெரிந்தபோது இன்பா ஏற்கனவே அந்தக் காட்டுவாசிகளின் பிடியில் இருந்தான். "பரத்த்த்" என அலறிக்கொண்டு நான் ஓடி வந்துகொண்டிருந்தேன்.

நான் என் நண்பர்களை நெருங்கிய வேகத்தை விட அந்தக்காட்டுவாசிகள் அவர்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு கணத்தில் பரத்தும் மாட்டிக்கொள்ள, நான் அனைவரையும் காப்பாற்ற எண்ணி ஓடிக்கொண்டிருந்தேன்.

"ஆதி. இங்க வராத ஆதி. ஓடிடு. வேணாம் ஆதி. வேணாம்" - என இன்பா கெஞ்சிக்கொண்டிருந்தான். ஆனால் நான் விடுவதாயில்லை. எப்பாடு பட்டாவது அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

"கவலைப்படாத இன்பா. நான் வந்துட்டேன்" என கத்திக்கொண்டே ஓடி வந்துகொண்டிருந்தேன்.

"ஆதி ஓடிடுடா. இங்க வராத. வேணாம்" எனக் கத்தினான் பரத். ஆனால் அதற்குள் நான் அவர்களின் மிக அருகில் வந்திருந்தேன்.

"ஆஆஆஆதீதீஈஈஈஈஈஈஈஈ' என நகுல் என்னை நோக்கி வந்தபோது, அவனைப் பிடிக்கக் காட்டுவாசிகளின் தலைவன் முன்னேறியிருந்தான்.

"நகுல்லல்லல்" எனக் கத்திக்கொண்டே அந்தக் காட்டுவாசிகளின் தலைவனைத் தாக்குவதற்கு நான் தயாரானேன். ஓடி வந்த வேகத்தில் காலைத் தரையில் ஊன்றி எட்டி உதைக்க ஒரே தாவாக தாவினேன். சரியாக காட்டுவாசி தலைவனின் மார்பில் உதைக்கத் தாவினேன்.

"டமால்" என உடைந்து நொறுங்கியது என் அறையின் சுவற்றில் மாட்டிவைக்கப்பட்டிருந்த வைத்திருந்த டீவி.

"அடேய். ஆதி. என்னடா ஆச்சு?" எனப் பதறியடித்தவாறே என் அம்மா உள்ளே வந்தபோது எனக்கு ஒன்று மட்டும் புரிந்திருந்தது. தங்கம் கிடைத்ததோ இல்லையோ. இப்பொழுது உதை கிடைக்கப்போகிறது என்று.

பயந்து போய் உள்ளே வந்த அம்மா என்னையும் உடைந்து கிடந்த டிவியையும் அதன் அருகில் கீழே கிடந்த என்னுடைய விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியையும் பார்த்தபோது, நடந்தது என்ன என்று அவரால் ஊகிக்க முடிந்திருந்தது. என்னை அடிப்பதற்கு வாட்டமாக கையில் விளக்குமாறை என் அம்மா எடுத்தபோது, நான் அவரைத் தாண்டிக்குதித்து ஓடத்துவங்கினேன் "இனிமே விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி போட்டு வீடியோ கேம் ஆடக்கூடாதுப்பா" என்று எண்ணியவாறே.

Saturday, 17 November 2018

சுத்தமான உப்பு

பரமார்த்த குரு கதைகள்:

பரமார்த்த குருவும் சீடர்களும் ஒருநாள் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார்.


சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான்.


இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ… நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் குரு எனக்கு கூறியிருக்கிறார். வேறோன்றும் பேசாமல் இது சுத்தமானதா என்று மட்டும் கூறு; என்று முட்டாள்தனமாக கேட்டான் சீடன்.


வியந்து போன கடைக்காரர் என்ன சொன்னாலும் புரியவைக்கயிலாத முட்டாள் இவன் என்று எண்ணி ;ஐயா உங்கள் குரு அறிவாளி! நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டும்மென்றால் காய்கறிகளை சமைக்கும் முன் நீரில் கழுவி சுத்தம் செய்வது போல் உப்பையும் கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம்; என்றார். இதைக்கேட்ட சீடன் ;இப்போதுதான் நீர் சரியாக யோசித்து பேசியுள்ளாய், இந்தாருங்கள் பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான்.


போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது சீடனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ;இந்த உப்பை, அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு கோபமடைவார். அதை விட இந்த ஆற்று நீரில் உப்பை அலசிச்சென்றால் உப்பு சுத்தமாகிவிடும், குருவுக்கு இது சுத்தமானதுதான் என்று கூறலாம்,அவரும் பாராட்டுவார். என்றவாறே உப்பை துணியுடன் நீரில் முக்கி எடுத்துக தன் தோலில் போட்டுக்கொண்டு சென்றான்.


போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தே போயிற்று.உப்பு கரைந்துபோனதை அவன் உணரவில்லை. வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட குரு “வாவா…ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா?” என்றவாறு உள்ளிருந்து அவசரமாக வந்தார். ஆம் குருவே நீங்கள் கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன்; என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை வாங்கி பார்த்த குரு “என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம்” என்றார்.


“இல்லை குருவே உப்பு வாங்கும்போது கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம் என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்றான். இதைக் கேட்ட குருவும்…உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடர்களும்.


உதவிக்கு பரிசு பகைமை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன.


ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று.


விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார்.


நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன்.


அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார்.


அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.

ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான்.


சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை.

சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார்.


நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான்.


முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும்,  முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான்.


“ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான்.


சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர்.


இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார்.


அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார்.


அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார்.


அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான்.


நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.


அதற்கு விக்கிரமன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும்.


“சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான்.


விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


மகிழ்ச்சி

முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. அவனிடம் ஏராளமான பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை.


முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், ”என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது. நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக் கூடாதா?” என்று பரிதாபமாகக் கேட்டார்.


செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தான்.


சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து வைப்பான்.


முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம்.


அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார்.


அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டிருந்தார்.


” என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை நோக்கி நடந்தார் முல்லா.


முல்லா வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான்.


அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு அருகாமையில் விழுந்து விட்டது.


செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் முல்லா கவனித்தார்.


உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார்.


” ஐயோ என் பணப்பை போய் விட்டதே” என்று கூக்குரலிட்டவாறு முல்லாவைத் துரத்திக் கொண்டு செல்வந்தன் ஒடினான்.


முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார்.


செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் முல்லாவைப் பின்

தொடர்ந்து ஒடினான்.


முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார்.


செல்வந்தன் ஒடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான்.


பிறகு ” முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினீர். இந்தப் பணம் கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் ” என்றார்.


” இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?” என்று முல்லா கேட்டார்.


” மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை முல்லா பறிபோய் விட்டது என்று நான் நினைத்த பணம் திரும்பக் கிடைத்து விட்டதே! என் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா?” என்று கூறினான் செல்வந்தன்.


” எதற்காகப் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் என்று கேட்டீரல்லவா? உமக்கு கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியை ஊட்டலாமே என்பதற்காகத் தான் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறினீர் அல்லவா

? அதற்காகத்தான் உமக்கு மகிழச்சியை ஏற்படுத்த வேண்டுமே என்று பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் ” என்றார் முல்லா.


Wednesday, 14 November 2018

குதிரை விசுவாசிகள்

ஒரு மருத்துவனை, அங்கே ஒருவர் படுத்திருந்தார். பக்கத்தில் அவர் மகன் நின்றுகொண்டிருந்தான். படுத்திருந்தவர், நோயின் கடுமையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.


மருத்துவரும், செவிலியரும் தங்களால் முடிந்த அளவுக்கு ஏதேதோ செய்துகொண்டு இருந்தார்கள்.


ஒருநாள் அடுத்த ஊர்க்காரர் ஒருவர், அவரைப் பார்க்க வந்தார். மகனைத் தனியே அழைத்து, “தம்பி! உன் அப்பா எனக்கு ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும், அதை இப்போ கொடுத்தா எனக்கு மிகவும் உதவியா இருக்கும்!” என்றார்.


“அப்படியா?!’’ என்ற மகன் அவரை அழைத்துக்கொண்டு அப்பாவை நெருங்கினான்,


“அப்பா!” என்றான்


அவர் மெள்ள கண் விழித்தார்.


“அப்பா! இவருக்கு நீங்க ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருக்காமே! சரிதானா!”


அப்பா மிகவும் சிரமப்பட்டு வாயைத் திறந்து, “ப்பே… ப்பே… பா… பா…” என்றார். பேச்சு வரவில்லை, வந்தவர் பார்த்தார்.


“தம்பி! பரவாயில்லை பாவம், அவரால் பேசக்கூட முடியவில்லை நான் வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வந்தார்.


“தம்பி! அப்பாவுக்கு நான் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டி இருக்கிறது..” என்று ஆரம்பித்தார்


அப்போது படுக்கையில் இருந்தவர் பட்டென்று எழுந்து உட்கார்ந்தார், தெளிவாகப் பேசத் தொடங்கினார்.


“ஆமாம், ஆறு மாசத்துக்கு முன்னாடி அவசரத் தேவைன்னு வாங்கிக்கிட்டுப் போனீங்களே!” என்றார்.


கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேச முடியாத அந்த மனிதரால், இப்போது எப்படி இவ்வளவு நன்றாகப் பேச முடிந்தது? இன்றைக்கு இப்படியும் சில பக்தர்கள் இருக்கிறார்கள். ஆண்டவனே சிபாரிசு பண்ணினாலும் அடுத்தவர்களுக்கு உதவத் தயங்கு வார்கள்.


ஆனால், ஆண்டவனே ‘வேண்டாம்‘ என்று சொன்னாலும் அடுத்தவர்கள் செய்கிற உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தயங்க மாட் டார்கள். இவர்களை எல்லாம் ‘குதிரை விசுவாசிகள்’ என்று சொல்கிறார்கள் பெரியவர்கள். ஏன் தெரியுமா?


புல் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரைகள் தானே!


Tuesday, 13 November 2018

சங்கீதம் கற்ற முல்லா

முல்லாவுக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திடீரென ஆசை வந்து விட்டது.


சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஒரு பாட்டு வாத்தியாரிடம் சென்றார்.


” ஐயா எனக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. எனக்குச் சங்கீதம் கற்றக் கொடுப்பீர்களா?” என முல்லா அவரிடம் கேட்டார்.


” சங்கீதம் கற்றுக் கொடுப்பது தானே என் தொழில் நிச்சயம் தங்களுக்குக் சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன் ” என்றார் பாட்டு வாத்தியார்.


” நான் என்ன கட்டணம் தரவேண்டும்?” என்று முல்லா கேட்டார்.


” முதல் மாதம் 100 பொற்காசுகள் தரவேண்டும் அடுத்த மாதம் அறுபது பொற்காசு கொடுத்தால் போதும், மூன்றாவது மாதம் ஐம்பது பொற்காசுகள் கொடுங்கள். இவ்வாறு கட்டணம் குறைந்து கொண்டே போகும் ” என்றார் பாட்டு வாத்தியார்.


” சரி வருகிறேன் ” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் முல்லா.


” ஏன் புறப்பட்டு விட்டீர்கள்? சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையா?” என பாட்டு வாத்தியார் கேட்டார்.


” ஒரு பத்து மாதம் கழித்து வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாதா மாதம் குறையும் உமது கட்டண முறையில் பத்த மாதம் கழித்து நீர் இலவசமாகவே எனக்குக் கல்வி கற்றுத் தர வேண்டியிருக்கும். அதனால் பத்து மாதம் கழித்தே வருகிறேன் ” என்று கூறிவிட்டு முல்லா நடந்தார்.

நாகரத்தினம்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் பாலானவர்களின் விஷயத்தில் நயவஞ்சகமே வெல்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதை நிரூபிக்கும் ஒரு கதையை நான் கூறுகிறேன், கேள்” என்றது.


கடம்பவனம் எனும் கிராமத்தில் கண்ணன், ரங்கன் என்ற இரு மாடுமேய்க்கும் இளைஞர்கள் வசித்து வந்தனர். ஒரு நாள் மாலையில் ரங்கனுடைய மாடுகளில் ஒன்றைக் காணவில்லை. அதனால் அவன் கண்ணனைத் தன் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிப் போகச் சொல்லி விட்டு, தான் தொலைந்து போன மாட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றான். மாலை மங்கும் நேரத்தில், தீடீரென ஒரு புலி எதிரே வர, ரங்கன் பயந்து போய் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.


சிறிது நேரத்தில், காட்டில் இருள் சூழ்ந்தது. இனி, தொலைந்து போன மாட்டைத் தேடிப் பயனில்லை என்று கருதிய ரங்கன் வீடு திரும்ப எண்ணியபோது, அவன் அமர்ந்து இருந்த பெரிய மரத்திற்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதரில் இருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த நாகத்தின் தலையில் கண்ணைப் பறிக்கும் ஒரு இரத்தினக் கல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது.


சரசரவென வெளியே வந்த நாகம் ரங்கனிருந்த மரத்தையணுகித் தன் தலையில் இருந்த இரத்தினத்தை எடுத்து, மரத்தின் அடியில் இருந்த ஒரு பொந்தினுள் வைத்து விட்டு, சற்றுத் தள்ளிப்போய் இன்னொரு மரத்தினடியில் அமர்ந்ததும் திடீரென ஒரு மனிதனாக மாறியது. நாகதேவனைப் போல் தோற்றமளித்த அந்த மனிதன் மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தான். இதைக் கண்ட ரங்கன் இனியும் அங்கு இருந்தால் ஆபத்து எனக் கருதி, சத்தமின்றி மரத்திலிருந்து இறங்கி, ஊரை நோக்கி ஓடிப்போனான்.


மறுநாள் அதைப்பற்றித் தன் தோழன் கண்ணணிடம் சொல்ல, கண்ணனின் விழிகள் வியப்பினால் விரிந்தன. அவன் ரங்கனை நோக்கி, “அடப்பாவி! சரியான முட்டாளாக இருக்கிறாயே! நாகரத்தினம் மட்டும் நம் கையில் இருந்தால், பாம்பு தீண்டிய பிறகு இறக்கும் நிலையில் இருப்பவர்களை நாம் காப்பாற்றி விடலாமே! நாம் அதையே ஒரு தொழிலாக வைத்துக் கொண்டால், நிறையப் பணம் சம்பாதித்துப் பணக்காரர்களாகி விடலாமே! சரி, சரி! இப்போது ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இன்று இரவு அந்த இடத்திற்கு நாமிருவரும் சேர்ந்து செல்வோம். இன்றும் நேற்று நடந்தது போல் நடந்தால் நாம் இரத்தினத்தைத் திருடிக் கொண்டு வந்து விடலாம்!” என்று கூறினான்.


ரங்கன் வர மறுத்ததால் கண்ணன் மட்டும் தனியாக காட்டுக்குச் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அன்று நாகம் வந்தது. நாகதேவன் தீவிர தவத்தில் ஆழ்ந்து விட்டான் என்று தெரிந்ததும், கண்ணன் சத்தமின்றி கீழே இறங்கி, இரத்தினத்தைத் திருடிக்கொண்டு, ஊரை நோக்கித் திரும்பினான்.


மறுநாள் காலையிலேயே, அவன் கடம்பவனம் கிராமத்தைவிட்டு வெகுதூரம் சென்று மற்றொரு பெரிய கிராமத்தை அடைந்தான். அந்த ஊரின் ஜமீன்தாரின் பெண்ணை ஒருநாள் நாகம் தீண்டிவிட, கண்ணன் தன்னிடம் உள்ள  இரத்தினத்தைக் கொண்டு அவளை உயிர் பிழைக்கச் செய்தான். அதனால் மகிழ்வுற்ற ஜமீன்தார் அவனுக்கு அந்த கிராமத்திலேயே வீடு அமைத்துதர, அவன் அந்த ஊரிலேயே தங்கிவிட்டான்.


வயல்களும், காடுகளும் நிறைந்த அந்தப் பிரதேசத்தில் தினமும் பலர் பாம்பு தீண்டி விஷமேறி அவனைத்தேடி வர அவன் அவர்களை குணப்படுத்தி வந்தான். காப்பாற்றப்பட்டவர்கள் அவனுக்குக் கொடுத்த பல வெகுமதிகளினால் அவனிடம் குவிந்த செல்வமும் ஏராளமாக ஆயிற்று.


கண்ணனால் வஞ்சிக்கப்பட்ட நாகதேவன் மறுநாள் காலையில் தவங்கலைந்து எழுந்த பிறகு தன் இரத்தினத்தைத் தேட, அது காணவில்லை.சுதேந்திரன் என்ற அந்த நாகதேவன் தன் இரத்தினத்தை இழந்துத் துடித்துப் போனான். எதிர்காலத்தில் இந்து என்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பி அந்த நாகதேவன் கட்டிய மணக்கோட்டை இடிந்து போயிற்று. அவன் அந்தப்பெண்ணை சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி!


ஒரு விவசாயியின் பெண்ணான இந்து பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். ஒரு நாள் அவள் தன் குடிசை வாயிலில் நெல்லைக் காயவைத்துவிட்டு, அவற்றைப் பறவைகள் கொத்தாமல் விரட்டிக் கொண்டு இருக்கையில், திடீரென அந்தப்பக்கம் ஓர் இளைஞன் வந்தான். இந்துவைக் கண்டதும் அவள் அழகில் மயங்கிய அவன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவளை வேண்ட, அவள் மறுத்தாள்.

 

கோபங்கொண்ட அவன் அவளிடம் வம்பு செய்ய, அவள் கூச்சலிட்டாள். ஆனால், அவள் கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் யாருமில்லை அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சுதேந்திரன் என்ற நாகதேவன் நிராதரவான இந்துவின் மீது மிகவும் பரிதாபப்பட்டு, அந்த இளைஞனின் மீது படமெடுத்து சீறிப்பாய, அவன் பயந்தோடிப் போனான். தனக்கு உதவி செய்த அந்த நாகத்தினை நன்றியுடன் இந்து நோக்க, திடீரென அந்த நாகம் மனிதனாக மாறியது.

 

அவள்முன் வசீகரமான தோற்றத்துடன் நின்ற சுதேந்திரன், “பெண்ணே! என் பெயர் சுதேந்திரன்! நான் நாகலோகத்தைச் சேர்ந்த நாகதேவன்! என்னிடம் இரத்தினம் உள்ளது. அதன் சக்தியினால்தான் நான் இப்போது மனித உருவம் எடுத்து உன் முன் நிற்கிறேன். “என்னால் அதிக நேரம் மனித உருவில் இருக்க முடியாது. ஆனால் நிரந்தரமாக மனிதனாக மாற முயற்சி செய்வேன். அதுவரை நீ எனக்காகக் காத்திருப்பாயா?” எனவும் இந்து சம்மதித்தாள்.


உடனே மட்டிலா மகிழ்ச்சியுற்ற சுதேந்திரன் சுக்ரானந்தர் என்ற முனிவரின் ஆசிரமத்தையடைந்து தன்னுடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். சற்று நேரம் யோசித்த முனிவர், “சுதேந்திரா! கடவுள் ஏதாவது ஒரு காரணத்தினால் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு குறிப்பிட்ட உருவத்தைத் தந்து இருக்கிறார். நீ நாகலோகத்தைச் சேர்ந்தவன்! அதனால் நீ நாகத்தின் உருவத்தில் இருப்பதுதான் நியாயம் ஆனது. ஆகையால் உன் ஆசையை விட்டுவிடு!” என்றார்.


சுதேந்திரன் இந்துவின் மீது தான் கொண்டுள்ள அன்பைப் பற்றிக் கூறினான். ஆகையால் முனிவர், “அவள் மீதுள்ள உன்னுடைய அன்பு மிக ஆழமானது என்று தெரிந்து கொண்டேன். ஆகவே, நான் உன் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்ற முயல்கிறேன். என்னுடைய தவ வலிமையினால் நீ இரவு முழுவதும் மனித உருவில் இருப்பாய், இரவு நேரங்களில் நீ பரம்பொருளை தியானித்துத் தவம் செய்து வா! உன் மூலம் பல ஜீவராசிகளுக்கு நன்மை ஏற்படும் விதத்தில் நடந்து கொள். சில நாள்களிலேயே, நீ நிரந்தரமாக மனிதனாக மாறுவாய்!” என்றார்.


அவ்வாறு தவம் புரிந்துவந்த இரவுகளில் ஓரிரவில் அவனுடைய இரத்தினம் திருட்டுப் போயிற்று. அதனால் அவனுடைய சக்திகளை இழந்து அவன் ஒரு சாதாரண நாகம் ஆனான். மிகவும் சக்தி வாய்ந்த அந்த இரத்தினத்தைத் தன்னிடம் இருந்து திருடியவனைப் பழி வாங்குவதற்குத் துடித்தான்.


அந்த நேரம், வேறோரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த கண்ணன். தன் பழைய நண்பன் ரங்கனைப் பார்க்க விரும்பி கடம்பவனம் வந்தான். ரங்கனை சந்தித்த அவன், நடந்த அனைத்ததையும் கூறிவிட்டு, “இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த நன்றியை நான் மறக்கவில்லை, என்னுடைய செல்வத்தில் பாதியை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்து விடு!” என்றான்.


அதற்கு ரங்கன், “நன்றி கண்ணா! ஆனால், நியாயமாக உழைத்துக் கிடைக்கும் கூலியையே நான் விரும்புகிறேன். ஆகவே, நீ சென்று வா!” என்றான். அதன்பிறகு கண்ணன் தன் ஊர் திரும்பினான். அப்போது வழியில் சுதேந்திரன் கண்களில் கண்ணன் தென்பட்டான். கண்ணனிடம் உள்ள இரத்தினத்தின் சக்தி சுதேந்திரனை ஈர்க்க, உடனே அது தன்னுடையதுதான் என்றும், அதை எடுத்துச் செல்பவனே திருடிச் சென்றவன் என்றும் உணர்ந்த நாகம் மிகுந்த கோபத்துடன் கண்ணனின் மீது சீறிப்பாய்ந்து அவனைக் கொத்தியது. என்ன ஆச்சரியம்? சுதேந்திரன் தானாகவே மனித உருவம் பெற்று நின்றான். அதே சமயம் கண்ணணுக்கும் நாகம் தீண்டியதால் விஷம் ஏறவில்லை.


இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா? சுயநலவாதியான கண்ணன் நாகம் தீண்டியும் எவ்வாறு விஷம் ஏறாமல் உயிரோடு இருந்தான்? அதைவிட வியப்பானது என்னவெனில், சுதேந்திரன் எவ்வாறு கண்ணனைத் தீண்டியதும் மனித உருவம் பெற்றான்? ரங்கன் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்வதே தருமம் என எண்ணி அதன் வழியே நடந்தான். ஆனால் அவன் முன்னேறவே இல்லை. தருமத்தின் வழியில் நடப்பவர்களுக்கு இந்த கதிதான ஏற்படுமா? என்னுடைய கேள்விக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.


அதற்கு விக்கிரமன், “ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு வேலையும் அது அதன் பலனின் அடிப்படையினால் மட்டுமன்றி, அந்த வேலையைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமையும் சூழ்நிலை மற்றும் வேலை செய்பவர்களின் பாவம் புண்ணியங்களின் அடிப்படையினாலும் அமையும். ரங்கன் மிகவும் கடுமையாக உழைத்து வாழும் வழ்கையை தேர்ந்தெடுத்தான். அதனால் அவனால் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ முடிந்தது. இரத்தினத்தை திருடினாலும், அதை வைத்து, பாம்பு தீண்டிய பலரின் உயிரைக் காப்பாற்றும் புண்ணியச் செயலைத்தான் அவன் செய்து இருக்கிறான்.


தவிர, செல்வம் சேர்ந்தவுடன் அதைத் தன் நண்பனுடன் பகிர்ந்தளிக்க அவனைத் தேடி வந்த நல்ல உள்ளம் படைத்தவன் கண்ணன். ஆகையால் சுதேந்திரன் என்ற நாகம் தீண்டியதும் அவன் இறக்கவில்லை. சுதேந்திரன் முனிவர் கூறியபடி  தானே நேரடியாக எந்த ஜீவராசிக்கும் உதவி புரிய வில்லை எனினும், அவனுடைய இரத்தினத்தின் மூலமே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆகவே அவன் நிரந்தர மனித உருவத்தைப் பெற்றான்.” என்றான்.


விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


குரங்கிற்கு திருட்டு பயிற்சி


பரமார்த்த குரு கதைகள்:

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


“குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?” என்று கேட்டான், மட்டி


“மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!” என்றான் மடையன்.


“அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!” என்று யோசனை கூறினான், முட்டாள்.


“ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?” என்று கேட்டார், பரமார்த்தர்.


“பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?” எனக் கேட்டான், மண்டு.


“நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்” என்று விளக்கம் சொன்னான், மூடன்.


“இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்” என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.


அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. “சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, “லபக்” என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.


சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.


அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது.


அதைக் கண்ட பரமார்த்தர், “சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!” என்று கத்தினார்.


மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர்.


அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!” என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.


சீடர்களும், “ரங்கா, ரங்கா!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.


மடத்துக்கு வந்து சேர்ந்ததும், “நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்” என்றான் மட்டி.


“குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!” என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.


அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.


ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.


வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.


அதைக் கண்ட மடையன், “சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!” என்று மகிழ்ந்தான்.


“ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!” என்றான், முட்டாள்


பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, “நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன” என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.


பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், “நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு” என்றான்.


சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.


ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.


அடுத்த கணம், “டமால், டுமீல்” என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.


வாய் இழந்த சீடர்கள், “ஐயோ, ஆஞ்சநேயா!” என்று அலறிக் கொண்டு உருண்டனர்.


நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், “இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார்.


“குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்” என்றனர் சீடர்கள்.


பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.


அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு….


அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.


பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.


“குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!” என்றான் மண்டு.


பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.


“இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்” என்று புகழ்ந்தான் மட்டி.


மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.


“வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!” என்று புறப்பட்டார், பரமார்த்தர்.


தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.


அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.


“குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!” என்று புலம்பினார்கள் சீடர்கள்.


Monday, 12 November 2018

தொப்பை கரைச்சான் லேகியம்


பரமார்த்த குரு கதைகள்:

திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.


“குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது” என்றான் மட்டி.


“வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?” என்று ஆச்சரியப்பட்டான், மூடன்.


“குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!” என்று பயம் காட்டினான் மடையன்.


“ஐயையோ!” என்று அலறிய பரமார்த்தர், “இதற்கு என்ன செய்வது?” என்று கேட்டார்.


“சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்” என்று யோசனை சொன்னான் மண்டு.


“வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!” என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள்.


உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான்.


“குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்” என்றபடி கீழே குதித்தான்.


எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், “சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்” என்று அனுப்பி வைத்தார்.


காட்டுக்குச் சென்ற சீடர்கள், “தொப்பை கரைச்சான் மூலிகை” எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.


அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.


“முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?” என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.


கோபம் கொண்ட முனிவர், “எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!” என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!


முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள்.


சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். “நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!” என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, “சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.


முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர்.


எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.


அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். “எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்” என்று பரமார்த்தரை வேண்டினார்கள்.


“பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது.


முட்டாளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.


“குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!” என்று கூறினான், மட்டி.


பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார்.


“குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!” என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.


பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.


அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.


நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. “ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!” என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர்.


தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.


மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார்.


இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!” என்று ஆணையிட்டான்.


சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.


“குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது” என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.


“லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!” என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.


கந்தர்வ கன்னி

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் உனக்கு இப்போது கூறப் போகிறேன். கவனமாகக் கதையைக் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.


வைசாலி ராஜ்யத்தில் திரிசங்கம் எனும் ஊரில் கலாதரன் என்ற ஒரு தெய்வீக சிற்பி வசித்து வந்தான். அவன் கல்லில் வடிக்கும் சிற்பங்கள் உயிருள்ளவைபோல் தத்ரூபமாக இருக்கும். ஒருநாள் இரவில் பௌர்ணமி நிலவொளியில் மொட்டை மாடியில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் மிக அழகான ஓர் இளமங்கை தோன்றி “சிற்பியே! என்னுடைய உருவச்சிலையை நீ கல்லில் செதுக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா?” என்று கேட்டாள்.


அதிரூப சுந்தரியான அந்தப் பெண்ணின் அழகில் தன் மனத்தைப் பறிகொடுத்த கலாதரன், “கண்டிப்பாக வடிக்கிறேன். அடுத்த பௌர்ணமி இதே நேரம் உன் சிலையை நீ காண்பாய்!” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான். அக்கணமே அவன் கனவும், தூக்கமும் கலைந்தன. கனவுதான் கலைந்ததே தவிர அந்த ரூபவதியின் அழகு அவன் மனத்திரையில் நன்றாகப் பதிந்து விட்டது. உடனே, தன் ஊரின் எல்லையில், மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு நீர் வீழ்ச்சியருகே அமர்ந்து ஒரு பாறையில் இரவும், பகலுமாகப் பாடுபட்டு அடுத்த பௌர்ணமிக்குள் அவளுடைய உருவச்சிலையை செய்து முடித்தான்.


கலாதரனின் கனவில் தோன்றிய அந்த அழகி ஒரு கந்தர்வ லோகத்துப் பெண். அவள் பெயர் நீலாஞ்சனா! ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் அவள் தன் தோழிகளுடன் பூலோகத்தில் சஞ்சாரம் செய்வதுண்டு. அத்தகைய ஓர் இரவில்தான் உறங்கிக் கொண்டிருந்த கலாதரனின் கனவில் தோன்றித் தன்னை சிலை வடிக்குமாறு வேண்டினாள். பிறகு அடுத்த பௌர்ணமி இரவில் வழக்கப்படி அவள் தன் தோழிகளுடன் பூலோக சஞ்சாரத்திற்குப் புறப்பட்டாள். நேராகத் தன் தோழிகளுடன் வைசாலி ராஜ்யத்துத் திரிசங்கத்தை அடைந்து, கலாதரன் வடித்திருந்த சிற்பத்தைக் காட்டி நடந்தவற்றைக் கூறினாள்.


சிலையைக் கண்டு வியந்த நீலாஞ்சனாவின் தோழிகளில் ஒருத்தி, “இதற்கு உயிர் இருந்தால் இன்னொரு நீலாஞ்சனா பூலோகத்தில் தோன்றி விடுவாள்,” என்றாள். 


மற்றொருத்தி, “நீலா… நீ இதற்கு உயிர் கொடுத்து விடு!” என்றாள். 


மற்றொருத்தி, “உன்னுடைய அறிவையும்,  மனத்தையும் இதற்கு அளித்து விடு!” என்றாள். 


அதற்கு நீலாஞ்சனா, “சிலைக்கு என் உயிரைத் தந்து விட்டால் நான் என்ன ஆவது?” என்றாள்.


“இல்லை. கந்தர்வர்களாகிய நமக்கு அபூர்வ சக்திகள் உண்டு. நீ சிறிது காலம் உன் உயிரையும், மனத்தையும், புத்தியையும் சிலைக்கு அளிப்பாய். அதே சமயம் உன் உயிர், மனம், புத்தி ஆகியவை உன்னிடமும் இருக்கும். கந்தர்வலோகத்திலும் பூலோகத்திலும் இரட்டைப் பிறவிகள் போல் இருப்பீர்கள்!” என்றாள் இன்னொரு தோழி.


“இது என்ன விபரீத விளையாட்டு?” என்று நீலாஞ்சனா கூற, “சிறிது காலம் நீ உன் அறிவினால் பல காரியங்களை சாதித்தபின், பூலோக நீலாஞ்சனாவை அழித்துவிடு!” என்றனர் தோழிகள் அனைவரும். நீலாஞ்சனாவிற்கு அந்த யோசனை பிடித்திருந்தது. உடனே அவள் தன் சக்தியினால் சிலைக்கு உயிர் கொடுத்து, அதனுடன் தன் புத்தியையும், மனத்தையும் பகிர்ந்து கொண்டாள்.


சிலை உயிர் பெற்று பூலோக நீலாஞ்சனாவாக மாறியது. உறக்கத்திலிருந்து எழுந்தவள் போல் உயிர்த்தெழுந்த பூலோக நீலாஞ்சனா, நகரத்திற்குச் சென்று தன் திறமையைக் காட்டுவோம் என்று எண்ணி இரவு முழுவதும் நடந்தாள். காலையில் ஒரு காட்டை அடைந்தாள். அங்கு புதரிலிருந்து ஒரு புலி அவள் மீது பாய, அடுத்த கணம் புலியின் மீது ஓர் அம்பு பாய்ந்தது. தன்னைக் காப்பாற்றியது யார் என்று நீலாஞ்சனா சுற்றுமுற்றும் பார்க்க, தொலைவில் வில், அம்புகள் ஏந்தி ஓர் இளைஞன் குதிரையின் மீது வருவதைக் கண்டாள். அவளருகில் வந்ததும் அவன், “நீ இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.


முதல் பார்வையிலேயே அவனிடம் மனத்தைப் பறிகொடுத்த நீலாஞ்சனா, “நான் பிழைப்பைத் தேடி தலைநகரம் செல்லும் வழியில் இந்தப் புலி குறுக்கிட்டது. என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி! ஆனால் என்னிடம் வாள் இருந்திருந்தால், நானே புலியைக் கொன்று இருப்பேன்” என்றாள்.


“அட! பெண்ணான உனக்கு வாள் வீசத் தெரியுமா?” என்று வியப்புடன் அவன் கேட்க, “என் பெயர் நீலாஞ்சனா! எனக்கு எல்லாப் போர்க்கலைகளும் தெரியும். நான் வைசாலி மன்னரை சந்தித்து என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுவேன்! உங்கள் பெயர் என்ன?” என்று அவள் கேட்டாள்.


“என் பெயர் பிரபாகரன்!” என்ற அந்த இளைஞன், “நீ மிகவும் அறிவாளி என்று தோன்றுகிறது. ஆனால் பெண்ணான உன்னைப் படையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நீ ஆண் வேடம் தரித்துக் கொள்! நானும் படையில் சேரத்தான் செல்கிறேன். அவந்தி ராஜ்ஜிய மன்னர் நமது ராஜ்யத்தின் மீது படையெடுத்துள்ளார். அதனால் நம் மன்னர் ஏராளமான வீரர்களைத் திரட்டுகிறார். என்னுடன் வா! உன்னை அழைத்துச் செல்கிறேன்!” என்றான்.


பிறகு இருவரும் தலைநகரம் சென்று சேனாதிபதியை சந்தித்து, படையில் சேர்ந்தனர். ஒருநாள் யுத்தகளத்தில் மன்னர் சேனாதிபதியுடன் யுத்தம் நடத்தும் விதத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டுஇருக்கையில், நீலாஞ்சனா அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து, “மகாராஜா! பகைவர்களின் படை நம்முடையதை விடப் பலமடங்கு பெரியது! அவர்களை நேருக்கு நேர் மோதி வெற்றி காண முடியாது. எதிரிப்படையில் குழப்பம் உண்டாக்கினால் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது” என்று தன் திட்டத்தை மன்னருக்கு விளக்கினாள்.


அதைக் கேட்டு மன்னர் வியந்து போனார். உடனே, தன் படையில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்தெடுத்து, அதற்கு அவளை உபதளபதி ஆக்கினார். அவளும் தன் படையை வழிநடத்திச் சென்று, போர்க்களத்தின் இருபுறமும் இருந்த மலைகள் மீதேறிப் பதுங்கிக் கொண்டாள். மறுநாள் போர் தொடங்கியதும், பகைவர் படை மீது எங்கிருந்தோ பாம்புகளும், தேள்களும் வந்து விழுந்தன.


மற்றொரு மலையில்இருந்து, தீப்பந்தங்கள் அவர்கள் மீது விழுந்தன. இதனால் பகைவர் படையில் ஒரே குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயம், வைசாலி ராஜ்ய வீரர்கள் அவர்களைத் தாக்க, பகைவர்கள் சரிவர போர்புரியாமல் பின்வாங்கி ஓடிப் போயினர். அந்த வெற்றிக்கு முழுக்காரணமான புத்திசாலி இளைஞனைப் பாராட்ட மன்னர் அவனைத் தன் அரண்மனைக்கு அழைத்தார். மன்னர் தனிமையில் இருந்தபோது, தன் ஆண்வேடத்தைக் கலைத்தாள் நீலாஞ்சனா.


“மகாராஜா! உண்மையில் நான் ஒரு பெண்! உங்களிடம் வேலைக்கு சேர்வதற்காக ஆண் வேடம் போட்டேன். என்னை மன்னிக்கவும்” என்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மன்னருக்கு அபார வியப்பும், மகிழ்ச்சியும் உண்டாக, வாரிசில்லாமலிருந்த அவர் நீலாஞ்சனாவைத் தன் மகளாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அவளை இளவரசியாக்கி அவள் விரும்புவதை அறிந்து பிரபாரகரை திருமணமும் செய்வித்தார்.


இவ்வாறு, தன் புத்திகூர்மையினால் பூலோகத்தில் வைசாலி ராஜ்யத்தின் இளவரசியான நீலாஞ்சனாவைப் பார்த்து, கந்தர்வலோக நீலாஞ்சனா மனம் பூரித்தாள். தன் தோழிகளிடம் தன்னுடைய பிரதிநிதியைப் பற்றிக் கர்வத்துடன் கூறினாள். ஆக, தாங்கள் ஆரம்பித்த விளையாட்டு முடிவுற்றது என்று கந்தர்வலோகப் பெண்கள் கருதினர். அவளை மீண்டும் பழையபடி சிலையாக்குவதற்காக,  கந்தர்வலோக நீலாஞ்சனா இளவரசியிடம் வந்தாள். அவள் யார் என்ற உண்மையை இளவரசிக்கு எடுத்துரைத்து, அவளது உயிரை எடுக்கப் போவதாகக் கூறினாள். ஆனால் அவள் அதற்கு இளவரசி மறுத்துவிட்டாள்.


“சொல்வதைக் கேள்! நாம் இருவரும் நிரந்தரமாக ஒரே சமயத்தில் வாழ முடியாது. நான் என் உயிரை தற்காலிகமாக உனக்குக் கொடுத்தேன். அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள என்னை அனுமதி!” என்றாள் கந்தர்வ நீலாஞ்சனா. “கந்தர்வப் பெண்ணே! நீ தனிமையாக வாழ்கிறாய். ஆனால் நான் என் வாழ்வை என் கணவனுடன் பிணைத்துள்ளேன். என் மீது அன்பைப் பொழியும் என் கணவர் நானின்றி உயிர் வாழ மாட்டார். நான் இப்போது வைசாலியின் இளவரசி! நான் மறைந்து போவதை குடிமக்களும் விரும்ப மாட்டார்கள்!” என்றாள் பூலோக நீலாஞ்சனா.


அவள் கடைசியாகக் கூறிய சொற்கள் கந்தர்வ நீலாஞ்சனாவின் மனத்தை உருக்கி விட்டன. ஆகையால் தனது இதயத்திலிருந்து தீ உருவாக்கி, அந்தத் தீயில் எரிந்து மறைந்து போனாள்.


இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! கந்தர்வப் பெண் நீலாஞ்சனாவின் மதிகெட்ட செயலைப் பார்! பூலோக நீலாஞ்சனாவிற்கு உயிர் கொடுத்ததே அவள்தான். அதுவும் தற்காலிகமாகத்தான். தன்னுடைய புத்திகூர்மையை தன் பிரதிபிம்பத்தின் மூலம் பூவுலகில் நிரூபித்துக் காட்டியபின், மீண்டும் அதைத் திருப்பி எடுத்துக் கொள்வதாக இருந்தாள்.


ஆனால் கடைசி நிமிடத்தில் புத்தி பேதலித்து, தன் பிரதிபிம்பத்தை உயிருடன் வாழ அனுமதித்து விட்டு, தான் உயிர் நீத்தாள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகும்” என்றது.


அதற்கு விக்கிரமன், “கந்தர்வப் பெண்ணான நீலாஞ்சனா தன் புத்தி சாதுர்யத்தை நிரூபிப்பதற்காக சிலைக்குத் தன் உயிரை தற்காலிகமாகக் கொடுத்தது உண்மைதான்! ஆனால் கடைசி நிமிடத்தில் அவள் மனம் மாறி தன்னுயிரைத் தியாகம் செய்தது முட்டாள்தனத்தினால் அல்ல, அவளுடைய தயாள குணத்தினால்தான்! விளையாட்டாகத் தொடங்கிய நாடகத்தில், பூலோக நீலாஞ்சனா போர்க்களத்தில் தன் தந்திரமான திட்டத்தால் வெற்றி பெற்றாள்.


அவள் தான் விரும்பிய பிரபாகரனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மன்னருக்கும், பட்டத்து ராணிக்கும் ஸ்வீகாரப் பெண்ணாகி விட்டாள். குடிமக்களின் மனம் கவர்ந்த இளவரசியாகி விட்டாள். அவள் உயிரைப் பறித்தால் அவளைச் சார்ந்துள்ள அனைவரும் பெரும் துக்கத்தில் மூழ்குவர். ஆகையால் தான் உயிர் நீப்பதே சிறந்தது என்றும், தன் பிரதிபிம்பமாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் என்றே அவள் மேற்கூறிய முடிவெடுத்தாள்” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலால் அவன் மவுனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


முல்லாவின் கடன் தொல்லை

முல்லா கதைகள்:

முல்லா ஒருநாள் ஒரு பெரிய பணக்காரிடம் சென்றார் ஒரு மனிதனுடைய கஷ்ட நிலையைக்

கண்டு மனம் பொறாமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு மனிதரிடம் கொஞ்சம்


பணத்தை கடனாக வாங்கி விட்டான். கடன் வட்டிக்கு வட்டியாக பல மடங்கு பெரிய தொகையாக வளர்ந்து விட்டது. அந்தக் கடனைக் கொடுக்க முடியாமல் அவன் மிகவும் சங்கடப்படுகிறான். கடன் தொல்லை தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்து கொள்வானோ

என்று கூட எனக்கு அச்சமாக இருக்கின்றது. அந்த மனிதனின் கடனை அடைக்க ஒரு ஆயிரம் பொற்காசுகள் இருந்தால் கொடுங்;கள். உரிய காலத்தில் உங்கள் தொகையை அவன் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று முல்லா மிகவும் உருக்கமாக கூறினார்.


அதைக் கேட்டு மனமுருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து ” அவ்வளவு கஷ்ப்படும் மனிதன் யார்?” என்று கேட்டார்.


” வேறு யாருமில்லை, நான்தான் ” என்று கூறிச் சிரித்தவாறு முல்லா சென்று விட்டார்.


இரண்டொரு மாதங்கள் கழித்து செல்வந்தரிடம் வாங்கிய பணத்தை முல்லா திருப்பித் கொடுத்து விட்டார்.


இரண்டொரு மாதங்கள் கழித்த பிறகு ஒரு நாள் அதே பணக்காரரிடம் வந்தார்.;


” யாரோ ஒருவர் கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறாராக்கும். அவருக்கு உதவ என்னிடம் கடன் வாங்;க வந்திருக்கிறீர் போலிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் செல்வந்தர்.


” ஆமாம் ” என்று முல்லா பதில் சொன்னார்.


” அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே” என்று செல்வந்தர் கேட்டார்.


” இல்லை , உண்மையாகவே ஒர் ஏழை தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் ” என்றார் முல்லா.


” உம்மை எவ்வாறு நம்ப முடியும்? பணத்தை வாங்;கிக் கொண்ட பிறகு நான்தான் அந்த ஏழை என்று கூறமாட்டீர் என்பது என்ன நிச்சயம்?” என்று செல்வந்தர் கேட்டார்.


” நீங்கள் இவ்வாறு சந்தேகப்படுவீர் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறனே” என்றார் முல்லா.


பிறகு வாசல் பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார்.


” நீர்தான் கடன் வாங்கிக் கஷ்டப்படும் ஏழையா?” என்று செல்வந்தர் கேட்டார்.


” ஆமாம் ” என்ற அந்த ஏழை பதில் சொன்னான்.


செல்வந்தர் முல்லா சொன்ன தொகையை ஏழையிடம் நீட்டினார்.


அதனை முல்லா கைநீட்டி வாங்கிக் கொண்டார்.


” என்ன பணத்தை நீர் வாங்கிக் கொண்டிர் பழையபடி என்னை ஏமாற்றுகிறீரா?” என செல்வந்தர் கேட்டார்.


” நான் பொய் சொல்லவில்லையே கடன் வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் அவனுக்குக் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடன் இப்போது வசூல் செய்கிறேன் ” என்று கூறியவாறு ஏழையை அழைத்துக் கொண்டு முல்லா நடந்தார்.


எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.