This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday 3 November 2018

22. தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்


எதிர்பாராத முத்தம்

- பாரதிதாசன் கவிதை


திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும் 

தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த - குருமூர்த்தி 


சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில் 

நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும் 


நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து 

சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் - அன்னார் 


அருளுவார்: "மெய்யன் புடையீரே, அப்பன் 

திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை - உருகாதீர்! 


அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத் 

தின்புலால் யாகச் சிறுமைதனை - நன்றுரைத்தான். 


ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ! 

தீதலால் வேறு தெரியாரோ! - சோதியான் 


சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர் 

உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் - மெய்யன்பீர், 


பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை 

ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! - தீங்கு 


வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார் 

கடவுள் கருணை இதுவாம்! - வடவர் 


அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப் 

பழிவாங் குதல்சைவப் பாங்குக் - கிழிவாம். 


வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின் 

நடமாட்டம் போகும்! நமனைக் - கெடமாட்டும் 


தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை 

ஆளுடையான் செம்மை அருள்வாழி! - கேளீர் 


குமர குருபரன் ஞான குருவாய் 

நமை யடைந்தான் நன்றிந்த நாள்! 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.