This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday 3 January 2019

Chella's ஏன்? உன்னை காதலித்தது தவறா.....?

சிறு வயது முதல் சேமித்த காதலை,
சில நொடிகளில்
சின்னாபின்னமாக்கிவிட்டாய்....!

மனம் நிறைந்த அன்பை மொழிய வார்த்தையின்றி,
குழந்தைத் தனமாய்
கோமாளி வேலைகள் செய்தேன்.....!

என்னை நானே காயப்படுத்தினேன்,
உன்னிடம் காதல்
உள்ளதா என அறிய....!

காயம் பட்டவன் நான்.
கண்ணீர் விட்டது நீ.

வேண்டுமென்றே விளையாடியதை கூறி,
விட்டுச் சென்றாய்
என் காதலை.....!

விளையாட்டாய் காதலை விதைத்து விட்டு,
வீதியிலே
விட்டெறிந்து விட்டாய் என்னை.....!

என்னுள் காதல் பூக்கவில்லை,
நேசிக்கிறேன் என்று
நீ என்னிடம் சொல்லும் வரை......!

சொல்லும் பொது இருந்த காதல்,
எப்போது
சொல்லிக்கொள்ளாமல் சென்றது?

கண்ணீரில் செந்நீர் வழிய,
காலங்களின் கையில் சிக்கி,
காணாமல் போகும் என் காதலை,
கண்டுகொள்ளாமல் போகிறாய்.....!

இதயம் இறந்து போக,
என்னுள்ளே நான் சமாதியாக,
இது தானா என் வாழ்க்கையின் விதி.....?

ஏன்? உன்னை காதலித்தது தவறா.....?

-செல்லா

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.