This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday 6 January 2019

Chella's என் மனமும்.....! நானும்....!

கார்த்திகை மாத மழையின்,
காலைப் பொழுதில்,
வெறுமையை
விரட்டிக்கொண்டு இருந்த என்னிடம்,
என் தனிமை கேட்டது......!


"பார்!
உனக்காக யாரும் இல்லை!

உன்னை நேசிக்கின்ற
நெஞ்சம் இல்லை!


உனக்காக அழுகின்ற
கண்கள் இல்லை!


உன் பேர் உச்சரிக்கும்
உதடுகள் இல்லை!


உன்னை நேசிக்க
ஆள் இல்லாத உலகில்,
யாரை நேசிக்க
நீ வாழ்கிறாய்.....?" என்று.

உண்மையைச் சொன்ன
என் தனிமையிடம்,
உவகையுடன் சொன்னேன்.


"ஆம்!
எனக்காக யாரும் இல்லை!
என் தந்தை போல்!


என்னை நேசிக்கின்ற
நெஞ்சம் இல்லை!
என் அன்னை நெஞ்சம் போல்!


எனக்காக அழுகின்ற
கண்கள் இல்லை!
என் நண்பனின் கண்கள் போல்!


என் பேர் உச்சரிக்கின்ற
உதடுகள் இல்லை!
என் தங்கை போல்!


இவர்களைப் போல்
என்னை நேசிக்க
ஆள் இல்லாத இவ்வுலகில்,
இவர்களை நேசிக்கத்தான்
நான் வாழ்கிறேன்......!"
என்றேன் சிரித்துக்கொண்டே.....! 



-செல்லா

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.