என்னவனே எனதருமை மன்னவனே!
முகம் பாராது முகவரி கேளாது,
அன்னைதந்தையின் ஆசையென,
உன் கரம் பிடித்தேன் நான்...
அன்றிலிருந்து இன்றுவரை,
தோள் கொடுக்கும் தோழியானாய்,
தோள்சாய்க்க தந்தையானாய்!
விரல்பிடித்து நடைபழகிய நாள் நினைவிலில்லை!
உன் கரம்பிடித்து நடைபயின்ற நாளோ மறக்கவில்லை!
மெட்டி அணிவிக்கும் முன்னே காதலில் கட்டி போட்டுவிட்டாயே!
குட்டி குட்டி குறும்பு செய்து முகம் சிவக்க வைத்தாயே!
எத்தனை உறவுகள் எனக்கிருந்தாலும்,
என் உயிரை தொடும் உணர்வு நீயல்லவா?
உன் உதட்டில் உறைந்திருக்கும் புன்னகையின் பின்னே,
அள்ள அள்ள குறையாத ஆனந்தங்கள் மட்டுமல்ல,
துளியும் குறையாத வலியும் உண்டென அறியாதவளா நான்?
என் சுவாசமாய் நீயிருக்க,
உன் சுவாசமாய் நான் இருக்க,
யாசித்து வரம் பெற்றேனோ நான்?!
சொல்ல துடிக்கும் என் இதயத்துக்கும்,
சொல்ல மறுக்கும் உன் இதழுக்கும்,
இடையே இருக்கும் இடைவெளி அதிகமில்லை...
அதை அறிந்த நாள் முதல் நான் என் வசமில்லை...!
என்னவனே எனதருமை மன்னவனே!
உன் இதயம் எனும் சிறைக்குள்ளே,
இன்றோடு நான் வந்து 20 வருடம்ஆகின்றது!
இனியும் கூட விடுதலை வேண்டாம்...
இந்த சிறை சுகமானது!!!
யாசித்து வரம் பெற்றேனோ நான்?!
சொல்ல துடிக்கும் என் இதயத்துக்கும்,
சொல்ல மறுக்கும் உன் இதழுக்கும்,
இடையே இருக்கும் இடைவெளி அதிகமில்லை...
அதை அறிந்த நாள் முதல் நான் என் வசமில்லை...!
என்னவனே எனதருமை மன்னவனே!
உன் இதயம் எனும் சிறைக்குள்ளே,
இன்றோடு நான் வந்து 20 வருடம்ஆகின்றது!
இனியும் கூட விடுதலை வேண்டாம்...
இந்த சிறை சுகமானது!!!
இறுதிவரை மட்டுமல்ல,
இனி வரும் ஈரேழு பிறவிக்கும் ,
இந்த சிறையில் இடம் கிடைக்க,
இறைவனிடம் வேண்டுகிறேன்!!!
இறைவனிடம் வேண்டுகிறேன்!!!
No comments:
Post a Comment