This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday 5 April 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 19




Click here to get all parts

விஜய்யின் உறுமலில் நடுங்கி போன சாரல் காரோடு பல்லி போல் ஒட்டி கொண்டாள்.இப்போது சர்மியும் அரவிந்தும் விஜய்யின் பயங்கரமான சத்தத்தில் பயந்து போய் காரை விட்டு இறங்கி சாரல் அருகே வந்து நின்றனர்....


என்னாச்சுக்கா ஏன் மாமா இவ்வளவு கோபம்மா இருக்கார் என சர்மி பயக்குரலில் கேட்க்க...


சாரலும் இதுக்கான விடையைத்தானே கேட்க்க நினைத்து அருகில் போக அதர்க்குள் அவனது உறுமலில் பயந்து போய் நிற்க்கிறாள்."சரி என என்னது என கேட்போமே என நினைத்தவள்"விஜய்"என அழைக்க போகும் வேளையில் மின்னல்லென்ன அவன் முன் ஐந்து கார்கள் வந்து நின்றது....


அதிலிருந்து கிட்டதட்ட நாற்பது ஆட்கள் இறங்கின.சதிஷூம் இறங்கினான்.அனைவரின் முகத்திலும் விஜய்யை பார்த்த பயம்,பதட்ட என அவன் முன் வந்து நிற்க்க சதிஷிடம் பாய்ந்தான்.....


"நான் தான் சொண்னேல்ல அவனுங்கள வாட்ஜ் பண்ணுடான்னு"என எரி மலையாய் குமுற....


நான் எல்லாருயும் வாட்ஜ் பண்னேன் விஜய்.ஆனா எங்கயோ தப்பு நடந்து போச்சு....


மற்றவர்களை பார்த்தவனின் முகம் தீயாய் இருந்தது."நீங்க என்ன பண்ணிங்கடா ஆ ....அங்க ஒரு உயிர் போனாலும் உங்களை சும்மா விடமாட்டேன்.....என கர்ஜிக்க அனைவரும் தலை குனிந்து கொண்டனர்..


எத்தனை ஆம்புலன்ஸ் வந்துருக்கு."வின வினான் சதிஷிடம்....


இருபது....


இது பத்தாது இன்னும் வர வை எனவும் "சரி என்றான் சதிஷ்."கிளபுங்க"என சொல்லவும் அனைவரும் அடுத்த நொடி அவன் கட்டளையில் காரில் அமர்ந்தனர்...


இதையெல்லாம் பார்த்து கொண்டுருந்தவர்களுக்கு"இந்த விஜய்யின் மறு பதிப்பு மிரட்டியது. அனைவரும் பயந்து போய் நடந்த வற்றை பார்த்துருக்க"இது பெரிய பிரச்சனை என மட்டும் யூகித்தனர்."இவ்வளவு நேரம் அன்பாக பேசிய மாமாவின் மறு உருவத்தைப் பார்த்து சர்மியும் அரவிந்தும் பயத்தைக் காட்டி நிற்க்க,சாரலோ தன் பின்ன சுற்றிய போது அவ்வளவு கடுமையாக பேசியப்பிறகும் அடுத்த நாளே புன்னகைை முகம்மாய் பார்த்தவனை இன்று வரை தன் முறைப்பிற்க்கு அசராமல் சிரித்து வைப்பவன் இது வரை விஜய்யை ஒரு பொருளை கேட்டு பிடிவாதம்மாய் தொங்கும் சிறுவன் அவனுக்குள் இருக்கிறான் என நினைக்க இப்பொழுது இந்த விஜய்யை பார்த்து அரண்டு போய் நின்றுந்தாள் சாரல்..


கார் கிளம்பிருந்தது.அவர்களை சுத்தம்மாக மறந்துருந்தான்.மனதில் அவ்வளவு கோபம் அந்த வீ ஆரின் மீது.. 


அக்கா நம்மல விட்டுடு போறாங்க என்ற சர்மியிடம்"இரு சர்மி ஏதோ பிரச்சனை போல போட்டும்."அப்போ நம்ம இப்படியேவா நிக்க முடியும்....


அப்பொழுது தான் பைக்கில் இருவர் வந்தன.அதில் ஒருவன் வந்து"வாங்க மேம் கிளம்பலாம் எனவும் சாரலின் மனதில்"இவ்வளவு பிரச்சனையிலும் எங்களை மறக்கலை அவன் என நினைக்க மனதில் இதம் பரவியது..


இருந்தும் அப்படி என்ன பிரச்சனை என மனம் அரிக்காமலும் இல்லை.பிறகு அவர்களை அழைத்து கொண்டு கிளம்பியது.....


விஜய் காரை விட்டு இறங்க அந்த இடம்மே போர்களம் போல் இருந்தது.அவனது புது கட்டிடத்தின் காண்கிரிட் போட அங்க ஜம்பது பேர் குழுமி இருந்தனர்.மணல் எட்டு மணிக்கு இறங்க ஒன்பது மணிக்கு வேளையை ஆரம்பிக்கலாம் என இருந்த வேளையில்"மணல் லாரி வந்தது.மணல் வந்துட்டது என நினைத்து தங்களது அடிபடை வேளைகளை செய்ய ஆரம்பித்த நேரத்தில்"லாரியில் ப்ளாஸ்டிக் சீட்டை நீக்கி கொண்டு கிட்டதட்ட நூறு பேர் அதிலிருந்து சாரை சாரையாக போலிஸ் படையென ஆட்கள் தடுமாடன இறங்க அனைவரும் என்னது ,யார் இவர்கள் என உணரும் முன்னே அவர்களை தங்களுடன் கொண்டு வந்த உயிர் போகாத ஆயிதங்களை கொண்டு மற்றவர்களை தாக்க ஆரம்பித்துருந்தனர்....


அவர்களும் முடிந்த அளவு அவர்களுடன் எதிர்த்து அடிக்க முயன்று தோற்று போய் உயிர் போகும் அடிகளை வாங்க கொண்டுருந்தனர்.அனைவரும் முரட்டு ஆட்கள் காட்டுமிராண்டி தனமாய் அடிக்க சில பேர் தப்பிக்க முயல யாரையும் விடவில்லை.அதில் சரிக்கு சமமாய் பெண்கள் என்பதாள் சில பேர் ஒரு சில அடிகளில் ரத்த வெள்ளத்துடன் சரிந்தனர்.வலியின் கதறலும் மரண ஓலம்மாய் கேட்டது...


பிரதான சாலைக்கு சற்று தள்ளி இருந்ததாள்.பட்டென்ன ஆட்கள் வரவில்லை.பிறகு ஒருவர் காதில் விழ அது அடுத்தடுத்து போக ஆட்கள் வர ஆரம்பிக்க."சுதாரித்த ஆட்கள் லாரியில் ஏறினர். யார் முன்னே வந்தாலும் மரணம் நிச்சயம் என்பதைப்போல் அசுர வேகத்தில் கிளம்பி மறைந்துருந்தது......


சில பேர் ஆம்புலன்ஸிற்க்கு போண் பண்ண அதில் ஓருவர் அங்கு வைக்க பட்டிருந்த கே.வி.எம் கண்ஷக்சன் என்ற பலகையில் இருந்த நம்பரை பார்த்து தகவல் சொல்ல பிறகு அனைவருக்கும் பரவியது....


விஜய் ஒரு நொடி அசையாமல் நின்றான்.இருபதுக்கும் மேற்பட்டோர் ஹாஸ் பெட்டல் போயிருந்தாலும் மற்றவர்கள் ரத்த வெள்ளத்துடன் தரையில் கிடந்தனர்.சிலருக்கு கடுமையான காயம்,நெற்றி தெரிக்க,சிலருக்கு கை சதையும் கால் சதையும் கிளிய,பலருக்கு கை கால் முறிந்துருக்கும்.சிலர் மயக்கத்தில் ஆழ்ந்துருக்க பலர் வலியில் துடித்துக்கொண்டுருந்தனர்....


"இதற்கல்லாம் அந்த நூர் பேர் காரணம்மா, இல்லை நான் காரணம்மா,என் மேல் கொண்ட குரோதம் அவர்கள் புறம் திரும்பிருக்கிறது.இதற்க்கு நான் மட்டும்மே பொருப்பு இவர்களின் இந்த நிலைக்கு நான் மட்டும்மே காரணம் இதில் ஒரு உயிர் கூட போக கூடாது அது என்னை வாழ் நாள் முழுதும் ரம்பம்மாய் அறுத்து வதைக்கும்மே...


அனைவரையும் தூக்கி ஆம்லன்ஷில் வைத்தான்.சதிஷூம் அவனது மற்ற ஆட்களும் அதை தான் செய்து கொண்டுருந்தனர்.விஜய்யின் சந்தன நிற சட்டை ரத்த நிறம்மாய் மாறி இருந்தது.அதையெல்லாம் பார்க்க விஜய்க்கு மனம் ஆறவில்லை.அவனது அமைதியை புறக்கணித்து அவனக்குள்ளே இருந்த அசுர விஜய் வெளிய வர முயர்ச்சித்து கொண்டுருந்தான்.....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.