This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday 29 October 2018

இறைவனை நெருங்க வழி


தென்கச்சி .கோ . சுவாமிநாதன் கதைகள்:

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?


நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .


உடனே புறப்பட்டான் .


போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்


அவர் கேட்டார் .


" எங்கே போகிறாய் ?"


" கடவுளை காண போகிறேன் !"


" எங்கே ? "


" கோவிலில் !"


" அங்கே போய் ........"


" அவரை வழிபட போகிறேன் ! "


" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"


" தெரியாது "


" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"


" அப்படியென்றால் "


" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "


அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்


ஞானி தெளிவு படுத்தினார்


" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "


" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."


" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"


" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"


" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"


" அதற்க்கு வழி ?"


" தியானம்"


" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"


" இல்லை " மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :


" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "


அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .


தன்னுடைய தேவையை சொன்னார் :


" I WANT PEACE"


ஞானி சொன்னார்:


" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .


' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !


' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .


வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .


" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"


" எப்படி அது ?"


" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"


அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !


ஞானி கேட்டார்


" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"


" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"


உற்சாகமாக சொன்னான் .


" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"


"இல்லை "


" அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"


" யார் அவர் "


" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"


வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .


" சரி , சுவாமி . நான் வர்றேன் !"


சோர்வோடு நடந்து போனான் .


அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .


ஞானி கேட்டார் :


" எங்கே போகிறாய் ? "


" வீட்டுக்கு !"


" கோவிலுக்கு போகவில்லையா ?"


" இல்லை "


" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"


" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .


'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "


ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .


" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.