This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 29 October 2018

18. பறந்தது கிள்ளை

எதிர்பாராத முத்தம்

- பாரதிதாசன் கவிதை


விடியுமுன் வணிகர் பல்லோர் 

பொதிமாட்டை விரைந்தே ஓட்டி 

நடந்தனர் தெருவில் காதில் 

கேட்டனள் நங்கை. நெஞ்சு 

திடங்கொண்டாள்; எழுந்தாள். வேண்டும் 

சில ஆடை பணம் எடுத்துத் 

தொடர்ந்தனள் அழகு மேனி 

தோன்றாமல் முக்கா டிட்டே! 


வடநாடு செல்லும் முத்து 

வணிகரும் காணா வண்ணம் 

கடுகவே நடந்தாள். ஐந்து 

காதமும் கடந்த பின்னர் 

நடைமுறை வரலா றெல்லாம் 

நங்கையாள் வணிக ருக்குத் 

தடையின்றிக் கூற லானாள் 

தயைகொண்டார் வணிகர் யாரும்


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.