This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday 25 December 2018

Anubama karthik's தோல்வி நிலையென நினைத்தால் 14



இடம் மாறிய இதயங்கள்

இணைகின்ற நேரத்திலே

விடை காண துடிக்குத்தே

விடையில்லா கேள்விக்கு

விடையாக  வந்தவளே

விலகாதே என்னவளே

நீ விலக நினைத்தாலே

என்னுயிர் நீங்கும் என்னவளே


 

நிர்மலமான இரவு, இரு அறிமுகமில்லா இருவர் தனிமையில் சந்திக்கும் வேளை, இயற்கையின் ரசவாதத்தால் இருயிர்  ஒருயிர் ஆகும் தருணம், தோழியர் புடை சூழ மங்கை நல்லாள் இல்லறமாம் நல்லறம் கற்க முதலடி எடுத்து வைக்க துவங்கினாள்.


குழப்பம் மேவிய முகங்களுடன் அமர்ந்திருந்த தம்பதிகள் இருவரும், ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச தயங்கினர்.


மெல்ல பேசத் துவங்கிய பாஸ்கர் தன் மனைவியின் குழப்பம் கல்விக்கானது என்று அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான். பின்னர் தன் மனைவிக்கு படிக்க எந்தவிதமான தடையும் இல்லை என உணர்த்தினான்.


கல்விக்கான தடை நீங்கியதில் மகிழ்ச்சி கொண்ட ப்ரபாவோ, தான் குடும்பத்தை கவனித்து கொள்வதாயும், தேவை ஏற்படின் தொழிலுக்கும் உதவ முடியும் எனக்கூற தான் கேட்காமலே தன் தேவையை நிறைவேற்ற முனைந்த மனைவியிடம் பாசம் பெருகியது பாஸ்கருக்கு, அங்கே ஒரு இல்லறம் நல்லறமானது.


ப்ரபாவின் ஆலோசனையின் பேரில் அந்த ஊரில் ஒரு பள்ளியும் நூலகமும் ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார் பாஸ்கர், அந்த நூலகத்துக்கு நூலகராக பகுதி நேர வேலைக்கு  வந்தவர்தான் ஷேஷகிரி.


எழ்மையான குடும்பத்தில் பிறந்தவராகையால் தனது தாய் கஷ்டப்பட்டு மெஸ் நடத்தி தன்னையும் தனது தம்பி தங்கையையும் படித்து ஆளாக்கி வருவதை உணர்ந்தே இருந்தார்.


இன்னமும் சில வருடங்களில் தன் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டிய கடமை இருப்பதால் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்தார்.


வேலைக்கு வந்த இடத்தில் விவசாய பூமி ஆகையால் இங்கு குறைந்த விலையில் கிடைத்த தரமான பொருட்களை நகரத்தில் இருக்கும் வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் வாங்கி விற்க துவங்கினார், அவ்வகையில் பாஸ்கரின் வீட்டுக்கும் வந்து போக நேர்ந்தது.


நூலகத்தில் இருக்கும் நல்ல புத்தகங்களை பெண்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். தொழிலில் அவரின் நாணயம் பிடித்து போகவே அவரின் மூலமாகவே பாஸ்கரின் பரிவர்த்தனைகள் நடந்தன, இந்நிலையில் ப்ரபா கருவுற்றாள்.


மாதாந்திர பரிசோதனைக்கு ப்ரபாவுக்கு துணையாக லக்ஷ்மியும் பாஸ்கரும் போய் இருந்தனர்.


அங்கு வந்த நர்ஸ் ஒருவர் இறக்கும் தருவாயில் உள்ளஒரு நோயாளி அவர்களை பார்க்க விரும்புவதாக தெரிவிக்க பார்க்க சென்ற பாஸ்கர் ப்ரபாவுக்கோ அதிர்ச்சி தாங்க முடியாது மயங்கி விழுந்தாள். காரணம் அங்கு படுக்கையில்  நோயாளியாக கண்டது அவளின் அக்கா சாரதாவை அல்லவா?


சாரதாவின் வாழ்வில் என்ன நடந்தது? அவள் இப்படியாக காரணம் என்ன? அவள் காதலன் என்ன ஆனான் ?  அவளின் பெற்றோரை சாரதா சந்தித்தாளா? 


விடைகள் அடுத்த அத்தியாயத்தில்

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.