Raagaa's recipes
தேவையானவை:
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 25 (அ) காரத்திற்கேற்ப
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
வடுமாங்காய் - அரை கிலோ
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி, ஈரம் போக துடைத்துக் கொள்ளவும். ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் மாங்காய்களைப் போட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்துகொள்ளவும். பெரிய வடுமாங்காய்களாக இருந்தால், காம்புப்பகுதியில் கீறி விடவும். அப்போதுதான் நாம் ஊற்றும் சாறு மாங்காயின் உள்ளே இறங்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றாமல் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நிறம் மாறும் வரை வறுத்து ஆறவைத்து... உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள கலவையை எண்ணெய் தடவிய மாங்காயுடன் கலந்து 10 நாட்கள் ஊறவிட்டு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.
குறிப்பு:
ஒவ்வொரு முறை மாங்காயை எடுக்கும் போதும் கையில் நீர் இல்லாமல் சுத்தமாக எடுத்தால் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
No comments:
Post a Comment