This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday 25 October 2018

16. எந்நாளோ!

எதிர்பாராத முத்தம்

- பாரதிதாசன் கவிதை


பாராது சென்ற பகல்இரவு நாழிகையின் 

ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத் 


தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன். 

தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்? 


கண்டவுடன்வாரி அணைத்துக்கண் ணாட்டி யென்று 

புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான் 


அன்பு நிலையம் அடையும்நாள் எந்நாளோ? 

என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ? 


கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் 

விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு 


தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி 

ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ? 


என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை 

இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே? 


ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் 

யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?" 


என்று பலவா றழுதாள்.பின் அவ்விரவில் 

சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள்.அப் புன்னைதனைக் 


கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத 

வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன் 


கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக 

ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப் 


பொன்னுடம்பு நோகப் புடைக்கஅவ ரைப்பிணித்த 

புன்னை இதுதான்! புடைத்துதுவும் இவ்விருள்தான்! 


தொட்டபோ தெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை, 

விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக் 


கட்டிவைத்த காரணத்தால், புன்னைநீ காரிகைநான் 

ஒட்டுறவு கொண்டுவிட்டோம். தந்தை ஒரு பகைவன்! 


தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? 

நோயோ உணவு?நாம் நூற்றாண்டு வாழ்வோமோ? 


சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! 

ஏதோ அறியேன் இனி. 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.